Update (20:00):
இன்று (11.09.2025) காலை 9:30 மணிக்கு பாசல் எல்லையில் ஆரம்பமாகிய ஈருருளிப்பயணம் பாசல், சொலத்தூண் மாநிலங்கள் ஊடாக 101 Km பயணித்து சுவிஸ் நாட்டின் தலைநகரான பேர்ண் மாநிலத்தை வந்தடைந்தது.
11.09.2025 (09:30):
இன்று (11.09.2025) காலை 9:30 மணிக்கு பாசல் எல்லையில் ஆரம்பமாகிய ஈருருளிப்பயணம் பாசல், சொலத்தூண், பேர்ண், பிறிபேர்க், வோ, மாநிலங்களை கடந்து எதிர்வரும் (15.09.2025) திங்கட்கிழமை ஜெனிவா ஐ.நா முன்பாக நடைபெற இருக்கும் மக்கள் பேரணியில் இணைய இருக்கின்றது.
சுவிஸ் வாழ் தமிழீழ மக்கள், செயற்பாட்டாளர் அனைவரும் உங்கள் மாநிலங்கள் ஊடாக பயணிக்கும் மனிதநேய செயற்பாட்டாளர்களிற்கு ஒத்துழைப்பு நல்கி 15.09.2025 இடம்பெறும் பேரணியில் பங்கெடுக்குமாறு உரிமையோடு கேட்டுக்கொள்கிறோம்.







